கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்

 

Kaliyuga Varadhan

 

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே

 

38.7K

Comments

465sG

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

Quiz

சிவனை பூஜிக்க உகந்த பூக்கள் எவை?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |