ஆசை முகம் மறந்து போச்சே

ஆசை முகம் மறந்து போச்சே இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ண னழகு முழிதில்லை
நண்ணு முகவடிவு கானில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
ஒய்வு மொழிதலுமில் லாமல் அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் அந்த
மாயன் புகழினை யெப்போதும்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு
பெண்க ளினத்திலிது போலே ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த
வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகமறந்து போனால் இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் இனி
வாழும் வழியென்னடி தோழி

 

Aasai Mugam Song of Bharathiyar by Uttara Unnikrishnan

 

43.0K

Comments

d33xj
உன்னிகிருஷ்ணனின் மகள் அருமையாக பாடுகிறாள் 👌👌👏👏 -கண்ணப்பன்

Read more comments

நரசிம்மர் ஏன் அஹோபிலத்தை தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார்?

நரசிம்மர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அஹோபிலத்தில் வீழ்த்தியதால் அதைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபுவின் மகனும், விஷ்ணுவின் தீவிர பக்தருமான பிரஹலாதன், அஹோபிலத்தை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்ற நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்தார். பிரஹலாதரின் மனப்பூர்வமான வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அந்த இடத்தைத் தனது இருப்பிடமாக மாற்றி அருள்பாலித்தார். பகவான் நரசிம்மர் அஹோபிலத்தை ஏன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக நுண்ணறிவை ஆழப்படுத்தும் மற்றும் பக்தியை வளர்க்கும்

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் எது?

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் - நமசிவாய. இது பஞ்சாக்ஷர மந்திரம் எனப்படும். இந்த மந்திரம் ஓம் உடன் ஓம் நமசிவாய என்ற வடிவத்திலும் உச்சரிக்கப்படுகிறது.

Quiz

சக்ரபாணி என்பவர் யார்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |